கஸல் கவிதை

காதலில் பாத சுவடு .....
எதிரும் புதிருமாக ....
காணப்படுவது ....
நம்மில் தான் ....!!!

உன்னை நினைக்கும் ...
போதேல்லாம் ...
என் எழுதுகருவி ....
தீப்பந்தமாகிறது .....!!!

உனக்காக ....
கல்லறையில் ....
காத்திருக்கிறேன் ....
என்றோ ஒரு நாள் ....
நீயும் அங்கு வருவாய் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

-----------

நெருப்பாக நீ இரு ....
நீராக நான் வந்து ....
அணைக்கிறேன் ...
காதல் ....
கருகிப்போகட்டும் ......!!!

என் புருவத்தில் ....
ஊஞ்சல் ஆடியவலே ....
இப்போ கண்ணில் ...
இருந்து........
வெளியேறுகிறாள் ....!!!

உச்ச கட்ட காதல் ....
காட்சி முடிவுக்கு ....
வந்தது .....
காட்சியை பார்ப்பவர் ....
கண்களில் கண்ணீருடன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 


--------

காதல் 
கடல் போன்றது ....
உண்மைதான் ...
கண்ணீர் உவர்க்கிறது ....!!!

நீ 
பேசிய நாள் ...
பௌணமி ...
பேசிய வார்த்தை ...
அமாவாசை .....!!!

காதல் ...
திருமண அழைப்பிதல் ...
வரும் வரை தான் ....
இன்பம் .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

------


காதல் அலைந்து ...
திரிகிறது .....
உண்மை காதலருக்குள் ....
குடி கொள்ள .....!!!


நீ 
காதல் தரவில்லை 
காதல் தான் உன்னை 
எனக்கு தந்தது .....!!!


காதல் பூ 
பூக்கும் போது பறிக்க ......
தவறி விட்டேன்......
இப்போ வாடுகிறேன் ....!!!


&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 

-------

கவிதைகள்

காயப்படுத்தி....

இருந்தால் ........

என்னை .....

மன்னித்துவிடு......

எல்லா நேரமும் ..........

கற்பனையில் ...............

எழுதமுடியது ....!!!

உனக்கு நான் தந்த .....

திருமணபரிசுபோல்.....

யாரும் தரமுடியது.....

என்னையே விட்டு .....

கொடுத்துவிட்டேன்........!!!

காதலின் பனிதுளி.....

கண்ணீர் .........

நிலாவின் கண்ணீர்......

பனித்துளி.........!!!

--------

& முள்ளில் மலரும் பூக்கள்

காதல் கஸல் கவிதை 1065

கவிப்புயல் இனியவன்

----

நீ

ரோஜா ஐயமில்லை

இதழா..? முள்ளா...?

அதுவே ஐயம்....!!!

என்னை காதலித்தால்......

கவிதைவரும்.....

கத்தரித்தால்......

கல்வெட்டு வரும்.....!!!

உன் விருப்பப்படி....

கண்ணுக்கு படாத.....

தூரத்துக்கு சென்று....

விட்டேன் -என் விருபபப்படி......... இதயத்திலிருந்து.....

எடுத்துவிடு.......!!!

-------


& முள்ளில் மலரும் பூக்கள்

காதல் கஸல் கவிதை 1066

கவிப்புயல் இனியவன்

---------------------------------------------

இறைவா.....
நீயும் அவளைபோல்.....
கனவில் மட்டும்.....
வந்து போகிறாய்......!

என்  கவிதைகள்.....
சிவப்பு நிறமாய்.....
இருக்க காரணம் நீ.....!

மறதியின் இடத்துக்கு.....
மறந்து போய் போய்விட்டேன்
மறந்து போய் உன்னை.....
மறுபடியும்நினைத்து விட்டேன்........!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நீந்த துடிக்கும்
மீன் குஞ்சு போல் ....
இறை ஆசை .....(+)

வறண்டிருக்கும்
குளம் போல் ......
மனம் ......(-)

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

------------------

ஐம்புலனை ....
அடக்கும் ஆமையின் ...
ஆற்றல் எனக்கில்லை ...(-)
நான் .....
ஆறறிவு மனிதன் (+)

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

-----------------

மனதில் இருள் ....
கருவறையில் .....
இறைவனுக்கு ....
காட்டும் ஒளியில் ....
மனம் குளிர்ந்தேன் ....!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

------------

இறைவா.....

இரண்டு மனம்

வேண்டும்..........!

 

உன்மீது பற்றை.....

அதிகரிக்க வேண்டும்....

என்மீது பற்றை.....

குறைக்கவேண்டும்....!

 

&

ஆன்மீக கஸல்

கவிப்புயல் இனியவன்

-------------

இலந்தை முள் மீது .....
தூங்குவதும்.....
உன்னை நினைவோடு .....
தூங்குவதும்.....
ஒன்றுதான் ..........!

உன் ஞாபகங்களை .....
சித்திரமாக்குகிறேன் .......
நீயோ கிறுக்கும் ......
கிறுக்கன் என்கிறாய் .....!

கண்ணீரோடு .......
அலைந்தால் தான் ......
உன் காதலை
பெற முடிகிறது .........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 08
கவிப்புயல் இனியவன்

---------------------

காகித பூவாக இரு ......
அப்போதுதான் .....
வாட மாட்டாய் .......!

உன் ......
கண்ணை விட ......
என் .......
கண்ணீர் அழகானது .....!

என் இதயம் .....
மட்டும் தான் ......
இருவருக்காக துடிக்கும் .....
உன்னிடம் இதயம் .....
இல்லாததால் ..........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 09
கவிப்புயல் இனியவன்

------------

பாவம் என் காதல்....
புண்ணியமாய்.....
கிடைத்த உன்னை .......
இழந்துவிட்டது.....!

என்னை ஏமாற்றிய.......
அடையாள சின்னம்......
உன் தாலி........!

எதுவுமே .......
நிலையில்லை.....
அனுபவத்தில்
உணர்த்தினாய்.........
திருமணத்தில்...........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 10
கவிப்புயல் இனியவன்

----------------------

கவிப்புயலின் கஸல்கள்
----------------------------

சில நேரங்களில்....
கனவுகள் பலித்தால்....
வலியென்ன என்பதை....
உன் காதலில்
கற்றுக்கொண்டேன்.....!

நீ.....
நினைவில் வரும்போது.....
தலைவலி தருகிறாய்....
கனவில் வரும் போது....
தலைவிதியாகிறாய்......!

நீ
போன ஜென்மத்தில்....
பட்டாம் பூசியாய்....
இருந்திருக்கிறாய்...........!

@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 01

------------------

எல்லா பூச்சியமும்....
பெறுமதியை கூட்டாது....
உன் நெற்றி பூச்சியம்....
என்னை
பூச்சியமாக்கிவிட்டது...!

பிரபஞ்சம் .....
வெறுமையானது.........
காதலும் ஒரு....
பிரபஞ்சம் தான்.....
தோற்றவனுக்கு.....!

இயற்கையின்.......
பேரன்பும் பேரழிவும்....
காதல்தான் .....
தோற்றிவிக்கிறது....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை